மறைந்த துளை!

பூமியின் வட துருவ பகுதியில் உள்ள ஓசோன் படலத்தில் முன்னெப்போதுமில்லாத வகையில் மிகப் பெரிய துளையை கண்டறிந்துள்ளதாக கடந்த மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “இது விரைவில் வடக்கு அரைக்கோளத்தில்(Hemisphere),இதுவரை காணாத மிகப்பெரிய துளையாக வளர்ந்துள்ளது” என்றும் அந்த துளை கிரீன்லாந்து(Greenland) நாட்டின் அளவுக்கு பரந்து விரிந்து இருந்ததாக அப்போது கூறப்பட்டது.இந்நிலையில், "வட துருவத்தின் ஓசோன் படலத்தில் இந்தாண்டு கண்டறியப்பட்ட மிகப் பெரிய துளை மூடப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அது எப்படி மூடியிருக்க  முடியும்?

ஏன் ஓசோன் படலம் முக்கியமானது?

ஓசோன் படலம் (Ozone layer) என்பது உயர் அடுக்கு மண்டலங்களினுடைய( stratosphere) ஓசோனைக் (O3) கொண்ட பூமியின் வளிமண்டலத்தில் உள்ள ஒரு படலம் ஆகும். சூரியனிலிருந்து வெளிப்படும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்கள் பூமியின் நிலப்பரப்பை அடையாமல் காக்கும் இயற்கையாக அமைந்த பாதுகாப்பு கட்டமைப்பே ஓசோன் படலம்.வளிமண்டலத்தின் மூன்றாவது அடுக்கான ஸ்ரெட்டோஸ்பியரில்தான் ஓசோன் மிகுந்து காணப்படுகிறது.அதாவது, பூமியிலிருந்து சுமார் 10 முதல் 40 கிலோமீட்டர் தொலைவுக்கு உட்பட்ட வளிமண்டல அடுக்குகளில் காணப்படும் ஓசோன், பூமியை பல்வேறுபட்ட கதிர்வீச்சு தாக்குதல்களிலிருந்து பாதுகாத்து வருகிறது.

சூரியனில் இருந்து வரும் புற ஊதாக்கதிர்களை தடுத்து நிறுத்தி மனிதர்கள் மீது படாமல் பார்த்துக் கொள்கிறது. இது தோல் புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் பூமியில் உருவாகும் அதிகப்படியாக மாசுபாட்டால் ஓசோன் படலம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.; ஆங்காங்கே ஓட்டைகள் விழுவதால் புற ஊதாக்கதிர்களால் மனிதர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படுகிறது. இதையொட்டி சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க பல்வேறு நாடுகளும் கட்டுப்பாடுகளை விதித்து செயல்படுத்தி வருகின்றன..இப்படிப்பட்ட ஓசோன் படலத்தில் பாதிப்பு ஏற்படுவதால் பூமியில் உள்ள பனிப்பாறைகள் உருகுகின்றன; உயிரிகளின் நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது. குளோரோ புளூரோ கார்பன் (CFC) மற்றும் தொழிற்சாலைகளின் புகையால் ஓசோன் படலம் பாதிக்கப்படுவதாக அறியப்பட்டது.

துளை மறைந்தது எப்படி?

இந்நிலையில் மனித உயிர்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்து வரும் கொரோனா மறுபுறம் மிகப்பெரும் நன்மையை அளித்துள்ளது. அதாவது கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் வகையில் உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீடுகளில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தி உள்ளனர்.பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் குறைந்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபாடு பெரிதும் குறைந்திருக்கிறது. 

இந்நிலையில் ஓசோன் படலத்தில் உண்டான துளை தற்போது மெல்ல சீரடைந்து வருகிறது என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் காரணமாக அண்டார்டிகாவுக்கு மேலே ஓசோன் படலத்தில் ஏற்பட்ட துளை சுறுங்கி மூடியுள்ளது.
வட துருவ பகுதியில் நிலவி வரும் அசாதாரணமான வானிலையே இந்த துளை வேகமாக வளர்ந்து, குறுகிய காலத்தில் மறைந்ததிற்கு காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.என்னதான் அந்த துளை தற்போது தானாகவே மூடிக்கொண்டாலும், வானிலை நிலைமைகள் மாறினால் மீண்டும் துளை உண்டாவதற்கு வாய்ப்பு உள்ளதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.

"வட துருவத்தில் வழக்கத்திற்கு மாறாக வலுவான மற்றும் நீண்ட காலமாக துருவ சுழல் ஏற்பட்டதே அதன் ஓசோன் படலத்தில் துளை ஏற்பட்டதற்கான காரணமே தவிர, இதற்கும் கொரோனா வைரஸின் காரணமாக உலகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை" என்று காம்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.வளிமண்டலத்தில் ஓசோனின் அளவு குறைந்து வருவதால் ஏற்பட்ட இந்த துளை, குறிப்பிட்ட பகுதியின் வருடாந்திர வானிலை மாற்றத்தினால்தான் மறைந்துள்ளது; ஆனால், இது நிரந்தரம் அல்ல. எனினும், ஒட்டுமொத்தமாக பார்க்கையில் ஓசோன் படலம் மெல்ல மீண்டு வருகிறது என்று நம்பலாம்."

வட துருவத்தை பொறுத்தவரை வேண்டுமென்றால் ஓசோன் படலத்தில் துளை ஏற்படுவது அசாதாரணமான நிகழ்வாக இருக்கலாம்.ஆனால், கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக அண்டார்டிகா மேலே இருக்கும் ஓசோன் படலத்தில் ஒவ்வோர் ஆண்டும் இதைவிட மிகப் பெரிய துளைகள் ஏற்பட்டு வருகின்றன.ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் துளைகளின் அளவு வேறுபட்டாலும், அவை விரைவில் மறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.1996இல் குளோரோஃப்ளூரோகார்பன்கள் தடைசெய்யப்பட்டதிலிருந்து ஓசோன் படலம் மெல்ல மீண்டு வருகிறது.

மேலும், 2030ஆம் ஆண்டுக்குள் ஓசோன் படலம் பழைய நிலைக்கு வந்துவிடும் எனவும் கணிக்கப்பட்டிருக்கிறது.ஓசோன் படலத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கில், செப்டம்பர் 16ஆம் தேதியை ஓசோன் பாதுகாப்பு நாளாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது.