யோசேப்புக்கும், மரியாவுக்கும், பவுல் அடியார், மற்றும் அனைத்து இறைவாக்கினர்களுக்கும் அவரே வழிகாட்டினார். நமக்கும் அவ்வாறே செய்வார் என்பதில் நம்பிக்கைக் கொள்வோம்.
நம்மையும் நமக்குள்ளதையும் பகிர வேண்டும் என்பது அவரது எதிர்ப்பார்ப்பு. நம்மில் உறவுகொண்டு வாழும் எவரும் அழிவுறக்கூடாது என்பது நமது கிறிஸ்தவ வாழ்வின் நோக்கமாக இருக்க வேண்டும். கிறிஸ்தவம் அழிவுக்கானது அல்ல, மாறாக வாழ்வுக்கானது.
நாளும் அவரோடு உறவில் வாழ முதலில் முற்படுவோம், அதுவே ஓர் உன்னத அற்புதமாக மாறும். கடவுளில் நம் முதன்மை கவனம் இல்லை என்றால், மற்ற அனைத்தும் விரைவில் நம் கவனத்தை ஈர்க்கும். நாம் படுகுழுயில் விழுவோம்.
ஆண்டவரின் ‘அஞ்சாதீர்' எனும் கூக்குரல் நமது செவிகளில் ஒலித்துக்கொண்டிருக்க வேண்டும். இல்லையேல் கிறிஸ்தவம் இவ்வுலகிற்கு உப்பாகவும் ஒளியாகவும் இருக்க முடியாது.
‘ஏட்டுக் கணக்கை மாத்தி மாத்தி எழுதி வச்சாரு – ஈசன் போட்ட கணக்கு மாறவில்லை போய் விழுந்தாரு’ என்ற ஒரு சினிமா பாடலின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. நம் விருப்பப்படி எதையும் சாதிக்கலாம் என்று எண்ணி செயல்பட்டால் தோல்விதான் மிஞ்சும்.
நம்மில் உயிரோட்டமான வாழ்வை அளித்திருப்பவர் தூய ஆவியார். அவர் நம்மில் இருந்துகொண்டு செயலாற்றும்போது, நாம் மாறுபட்ட வாழ்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் என்பதை ஆய்ந்துணர வேண்டும். நாம் உலகம் சார்ந்த வாழ்க்கைக்கான கோழைகள் அல்ல.
கிறிஸ்தவ வாழ்வில் நாம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இருளுக்கும் ஒளிக்கும் பணிவிடை செய்ய இயலாது. கடவுளுடனான நமது உறவை தைரியமாக அறிவிக்கவும் சாட்சியம் பகரவும் துணிவு தேவை. இந்த வரத்திற்காக தூய ஆவியாரிடம் மன்றாடுவோம்.
இன்றைய நாளில் அன்னை மரியைவைப போற்றி மாட்சிபடுத்தும் அதே வேளையில், கடவுள் நம்மீது தயவு கொண்டு, தம் ஒரே மகனுடனான மீட்பின் கருவிகளாகப் பங்குபெற அழைத்துள்ளார் என்பதை முதலில் நம்புவோம்.
இயேசு உயிர்த்தெழுந்தார் என்று கூறும்போது, அவர் இன்றும் என்றும் நம்மோடு வாழ்கிறார் என்பதுதான் பொருள். எனவேதான் இயேசு உயிர்த்தெழுந்தார் எனும் உண்மையைத் திரும்பத் திரும்பக் கூறுவதன் மூலம் அவர் உண்மையில் நம்மோடு வாழ்கிறார் என்பதை நற்செய்தியாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.
நாம் அனைவரும் உலக மீட்புக்கான பணியாளர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இயேசுவாலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை என்பதை உலகிற்குச் சொல்லாலும் செயலாலும் எடுத்துரைப்போம்.
நம்மில் தூய ஆவியாரின் ஆற்றல் உண்டு என்பதை முதலில் ஏற்க வேண்டும். நமது தேடல் இயேசுவின் திருவுடலாக விளங்கும் அவரது ஒரே திருஅவையில் முழுமை பெறுகிறது என்பதை நம்ப வேண்டும். அதைவிடுத்து இரும்புக் கடையில் வைர நகையைத் தெடுவதுபோல அங்கும் இங்கும் தாவுவதால் பயனில்லை. பாதை மாறியிருந்தால் இரு சீடர்களைப் போல் உண்மைக்குத் திரும்புவோம். நமது மந்த புத்தியைப் போக்கி, உண்மை சீடத்துவத்திற்கும் சாட்சிய வாழ்வுக்கும் உயிர் கொடுப்போம்.
உயிர்த்த ஆண்டவர் இன்றும் பலருக்குத் தோட்டக்காரராகவே இருக்கிறார். அவரில் நாம் தெளிவுப் பெற்று பிறருக்கு அவரை அடையாளம் காட்டும்போது, நாமும் மகதலா மரியாவாக மாற இயலும். நம்மையும் இயேசு பெரிட்டு அழைப்பார்.
ஆண்டுதோறும் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா என்பது வந்துபோகும் ஒரு கொண்டாட்டம் அல்ல. மாறாக, ஒவ்வொரு உயிர்ப்பு பெருவிழாவும் நம்மிலும் நமது மனிதநேய வாழ்விலும் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதே கிறிஸ்துவின் எதிர்ப்பார்ப்பு.
‘மனுமகனின் கல்வாரி மரணம் அவருக்கு ஒரு முற்றுப்புள்ளி அல்ல, அவரது இறையாட்சி கனவுக்குப் புதைக்கப்பட்ட விதை’ என்பதில் நமது நம்பிக்கையை அதிகமாக்குவோம், துணிவும் வாழ்வும் பெறுவோம்.
நம்மில் தியாக உணர்வு பெருக்கெடுக்கும்போது சுயநலம் எனும் தீ தானாகவே அணையத் தொடங்கும். எனவே, நம்மில் உள்ள ‘யூதாசை’ கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றுவோம். மனிதநேயத்திற்கும் பிறர் அன்பிற்குமானவர்களாக பொதுநலம் பேணுவோம். கடவுள் நல்லவர் பக்கம் என்றும் இருப்பார்.
மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்கள் போலன்றி இயேசுவின் சீடத்துவ வாழ்வு சிறப்புற துன்பத்தை ஏற்கவும் நேர்வழி நடக்கவும் முற்படுவோம். ‘அலகைக்கு இடம் கொடாதீர்கள்’ (எபே 4:27) எனும் புனித பவுல் அடிகளின் அறிவுரையை ஏற்போம்.