நாம் அடிக்கடி ஆலயம் செல்கிறோம். செபிக்கிறோம். ஆனால் "வந்து பாருங்கள்" என்ற இயேசுவின் வார்த்தைகளை உணர்ந்து அவரைச் சென்று பார்த்திருக்கிறோமா? இனிவரும் காலங்க கில் இயேசுவின் அழைப்பை ஏற்போம். கடவுளைச் சார்ந்தவர்களாக மாறி நம் வாழ்வால் அதை எண்பிக்க தொடர்ந்து முயல்வோம்.
கடவுளுடைய திட்டத்தை கபிரியேலின் வார்த்தைகள் வழியாகக் கேட்டவுடன் மரியா கலங்கினார் என நாம் வாசிக்கிறோம். கடவுளின் விருப்பம் நம்மைக் கலங்கடிக்கக்கூடியதா? பயமுறுத்தக் கூடியதா?
நாம் தடுமாறும் வேளையில் கடவுள் அவருடைய வார்த்தைகளாலோ அல்லது மனிதர்கள் மூலமோ நிகழ்வுகள் மூலமோ நாம் என்ன செய்ய வேண்டுமென்ற வழிமுறையை நமக்கு நிச்சயம் தருவார். இறைதிட்டம் நம்மிலே நிறைவேற அனுமதிக்கத் தயாரா?
இறைவேண்டலாலும், இறை திருஉளத்திற்குப் பணிந்து நற்காரியங்களில் ஈடுபடுவதாலும், உலக நாட்டங்களைத் தவிர்ப்பதாலும் நம் தூய்மையைக் காத்துக்கொள்ள முயல்வோம்.தவறி வீழ்ந்தாலும் மனம்மாறி அருட்சாதனங்களின் உதவியோடு மீண்டும் எழுவோம். அதற்காக இறைவேண்டல் செய்வோம்.
நமது உள்ளத்தின் ஆழத்தை அச்செபங்கள் தொடுவதில்லை. இதன் விளைவாக நாம் வாழ்வில் தளர்ந்து விடும் அபாயம் உள்ளது. எனவே திருவருகைக் காலத்தில் இருக்கும் நாம் இந்நாட்களைப் பயன்படுத்தி நம்முடைய இறை உறவை ஆழப்படுத்த முயலுவோம்.அவ்வுறவை நம் வாழ்நாளெல்லாம் தொடர முயற்சிப்போம்.