நிறைவாக, இயேசுவின் இன்றைய நற்செய்தியில்யில், அவர் தனது தந்தையுடன் கொண்டுள்ள ஒன்றிப்பைப்போல, நாம் இயேசுவோடு ஒன்றித்திருந்தால் நாமும் தந்தையாம் கடவுளோடு ஒன்றித்திருக்க முடியும் என்ற உண்மையைச் சுட்டிக்காட்டுகிறார்.
பவுல் அடிகள் கூறுவதைப்போல், ‘இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்’ (பிலி 2:10) ஆகையால், அவரது சீடர்களான நாம் ஏன் அவரது திருப்பெயருக்கு மண்டியிடக்கூடாது? மண்டியிடுவோம், பலன்களைப் பெற்று மகிழ்வோம்.
மண்ணுலகில் வாழ்ந்தாலும், மேலுலகைச் சார்ந்தவற்றையே நாம் நாட வேண்டும் என்பது சீடத்துவ வாழ்வுக்கு இன்றியமையாத வேண்டுகோள். இவ்வுலக வாழ்வு நமக்கொரு இடைப் பயணமே.
புவுல் அடிகளைப் போல் பெரிய அளவில் முடியாவிட்டாலும் நமது சுற்றுவட்டாரத்தில், நமது கிறிஸ்தவ முன்மாதிரி வாழ்வால், அன்புப் பணியால் வாழும், உண்மை கடவுளை நம்மால் எளிதாக வெளிப்படுத்த முடியும். இதற்குத் துணிவு தேவை. தூய ஆவியார் துணையின்றி நம்மால் இயங்க முடியாது. எனவே, அவரைப் பற்றிக்கொள்ளவும் அவரால் இயக்கப்பட நம்மை கையளிப்போம்.
கவலை எதற்கும் மருந்தாகாது. சிக்கலான சூழலில் மாற்றி யோசிக்கத் தொடங்கினால் சிந்தனை தெளிவுப்பெறும். ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற தன்னமில்லாத எண்ணத்தில் நற்செய்தியாளராக நம்மை நாம் மாற்றி யோசிக்க வேண்டும்.
இன்று திருஅவையில் முளைத்திருக்கும் பிரிவினைவாதிகளுக்கும் குழப்பவாதிகளுக்கும் எதிராக நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இயேசு கிறிஸ்து கூறுவதைப் போல, நற்செய்திப் பணியில் எதிர்ப்புகளை எதிர்கொள்ளும்போது அவருடைய வார்த்தைகளை நினைவில் நிறுத்தி முன்னோக்கிச் செல்வோம்.
“இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக! ” உரோ 12”2) என்று தான் பவுல் அடிகளும் அழைப்பு விடுக்கிறார்.
உலகில் அல்ல மாறாக, அவரில் அமைதியை நாடுவோம். அமைதி கிட்டும். ‘இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே’ எனும் வரிகளுக்கு ஏற்ப உண்மை அமைதிக்கு ஊற்றாக இருப்பவர் ஆண்டவர் இயேசு. அவரை விடுத்து உலக இன்பங்களில் அமைதியைத் தேடினால், தேடும் அமைதி கிடைக்கப்போவதில்லை.
ஒரு காலத்தில் தூய ஆவியை கத்தோலிக்கத் திருஅவையில் மறக்கப்பட்ட கடவுளாகத்தான் இருந்தார். ஆனாலும், அவர் உறங்கவில்லை. உலகைப் புதுப்பிக்கும் பணி தூய ஆவியாரின் செயல்பாடாக இருந்து வருவதை நாம் மனதில் கொண்டு அவரைப் போற்றி வழிபடுவதோடு, அவரில் இணைந்து வாழ நம்மை கையளிப்போம்.
இயேசுவின் வழியாகவே நாம் மீட்பையும் விண்ணக வாழ்வைப் பெறவும் முடியும். ஆகவே, நம் வாழ்க்கைக்கு ஆதாரமாகவும் வாழ்வும் வழியுமாக இருக்கும் இயேசுவை உலகிற்குத் துணிவோடு வெளிப்படுத்தும் வாழ்வை எப்படி வாழ்வோம் என்று சிந்தித்துச் செயல்பட வேண்டும். இயேசுவைப் பிறரோடு பகிராத வாழ்வு, பயனற்ற சாட்சிய வாழ்வு.
மாற்கு திருமுழுக்கு யோவானை ‘பாலைவனத்தில் ஒலிக்கின்ற குரலாக’ விவரிப்பதால் இவரது நற்செய்திக்கு ‘சிங்கம்’ சின்னமாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்று அறிகிறோம்.
மனிதன் இருக்குமிடமெல்லாம் கடவுள் இருக்கிறார், படைப்பு இருக்குமிடமெல்லாம் படைத்தவன் இருக்கிறான் என்பதில் நம்பிக்கை வைப்போம். அவரே நமக்கு வழியாகவும், ஒளியாகவும் இருப்பார். அவரே நமது நம்பிக்கை ஒளிக்கீற்று.
சந்தர்ப்பவாதிகளுக்கு திருஅவையில் இடமில்லை என்பதை இயேசு இந்த உவமையியின் வழியாக மேலும் எடுத்துரைக்கிறார். கிடைத்தவரை இலாபம் என்று பணி செய்வோர் கொள்ளை புறமாக நுழைவோராவர்.
தனது நம்பிக்கையில் தெளிவாக இருக்கும் ஒருவரின் மனதில் பல்வேறு கேள்விகளை கேட்டு அல்லது சந்தேகங்களை எழுப்பி குழப்பி, அவர்களை தன்வசம் திருப்ப நினைப்பது குட்டையை குழப்பி மீன் பிடித்தலுக்கு ஒப்பான ஓன்று. அதனால் குழப்பவாதிகள் குறித்து நாம் எப்போதும் எச்சரிக்கையாகவே இருக்கவேண்டும்.
அப்பம் பிட்குதலில் பங்கெடுத்ததால் பவுல் அடிகள் தொடர்ந்து நற்செய்திக்காகப் பயணித்தார். நற்கருணை வாழ்வை வாழ்ந்து காட்டினார். “வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்” (6:57) என்று இயேசு கூறியதைப்போன்று, இன்று அவரது திருவுடலாகிய நற்கருணையின் மக்களாக நாம் வாழ்கிறோம். நாமே உலக வாழ்வுக்கான இயேசுவின் திருவுடல்! என்பதைச் சிந்தித்துச் செயல்படுவோம்.
யோசேப்புக்கும், மரியாவுக்கும், பவுல் அடியார், மற்றும் அனைத்து இறைவாக்கினர்களுக்கும் அவரே வழிகாட்டினார். நமக்கும் அவ்வாறே செய்வார் என்பதில் நம்பிக்கைக் கொள்வோம்.