பவுல் அடிகள் கூறுவதைப்போல், ‘இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்’ (பிலி 2:10) ஆகையால், அவரது சீடர்களான நாம் ஏன் அவரது திருப்பெயருக்கு மண்டியிடக்கூடாது? மண்டியிடுவோம், பலன்களைப் பெற்று மகிழ்வோம்.
1 அரசர்கள் என்பது கத்தோலிக்க கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும். இதன் பின்னே வருகின்ற 2 அரசர்கள் என்னும் நூல் யூதா-இசுரயேல் நாடுகளின் வரலாற்றைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது.
நல்லனவற்றை செய்ய நமக்குப் பிறருடைய அங்கீகாரம் தேவை என நினைத்தால் நம்மால் நற்காரியங்கள் செய்யவே முடியாது. எனவே பிறருடைய அங்கீகாரத்தையும், விமர்சனங்களையும் பொருட்படுத்தாமல் மனத்துணிவோடு நற்செயல் புரிய கற்றுக்கொள்வோம்.
நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ நல்லது செய்யாவிட்டால், பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடக்கி ஆளவேண்டும்” என்றார்.
நாம் வாழும் இந்த சமூகத்தில் எத்தனையோ நபர்கள் இருள் நிறைந்த வழியிலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட அனைவருமே இயேசு இந்த உலகிற்கு கொண்டு வந்த ஒளியைக் கொடுக்க முயற்சி செய்வோம்.
இயேசு " மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.” என்று கூறுகிறார்.